Archives: பிப்ரவரி 2018

போதுமானதல்லவோ?

ஆலயத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது என்னுடைய மகள் பின் இருக்கையில் அமர்ந்தபடி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற குழந்தைகள் அவளிடம் பகிர்ந்தளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தன. நான் அவர்களின் எண்ணத்தை திசை திருப்பும்படி. சிற்றுண்டிகளைச் சேமித்து வைப்பவளிடம், இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் ஒரு கூடை நிறைய ரொட்டிகளையும் மீனையும் தயாரித்ததாகவும், ஏனெனில் ஒரு குழந்தை இயேசுவுக்கு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீனையும் கொடுத்தது. இயேசு அதைக் கொண்டு 5000 பேருக்கு மேலான ஜனங்களை போஷித்தார் (யோவா. 6:1-13) எனக் கூறினாள்.

இது அச்சிறுவனின் பகிர்ந்தளிக்கும் குணத்தைக் காட்டுகிறது. தேவன் உன்னுடைய மீனையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கிறாரென நினைக்கிறாயா? எனக் கேட்டேன். இல்லை சும்மா என பதிலளித்தாள்.

நான் அவள் அத்தனை பிஸ்கட்டுகளையும் அவளே வைத்துக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாதென முயற்சித்தேன். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அனைவருக்கும் கொடுக்கும்படி போதுமானதாக இல்லை என்றாள்.

பகிர்தல் என்பது கடினமானதுதான். நம் கையில் உள்ளதைப் பற்றிக் கொள்வது எளிதுதான். ஒரு வேளை நாம் கணக்குப் போட்டு, அனைவருக்கும் போதியதாக இல்லை எனக் காரணம் கூறலாம். நம் கணிப்பு என்னவெனின் நாம் இப்பொழுது கொடுத்து விட்டால் பின்னர் நமது தேவைக்கு ஒன்றுமிராது என்பதே.

நாம் அனைவரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள். நாம் உதாரண குணமுள்ளவர்களாயிருக்கும்படி, தேவன் நம்மை எல்லா வகைகளிலும் வளப்படுத்தியுள்ளார் (2 கொரி. 9:10-11) என பவுல் நினைப்பூட்டுகின்றார். பரலோகம் என்பது பற்றாக்குறையை கணக்கிடும் இடம் அல்ல, ஏராளமானவற்றையே கொண்டது. நாம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் நாம் மற்றவர்களிடம் உதாரத்துவமாயிருக்கும்போது தேவன் நம்மை கவனித்துக் கொள்வார் என வாக்களித்துள்ளார்.                                                        

உண்மையாயிருக்க தைரியங்கொள்ளல்

ஹடாஷாவை நிரந்தரமாக பயம் ஒட்டிக் கொண்டது. பிரான்கைன் ரிவர் என்பவர் எழுதிய ‘’எ வாய்ஸ் இன் த வின்ட்’’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த கற்பனைக் கதையின் கதாப்பாத்திரம் தான் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹடாஷா என்ற யூத குல சிறுமி. ஒரு ரோம வீட்டில் அடிமையாக ஹடாஷா இருந்தபோது, அவள் கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக தான் துன்புறுத்தப்படலாம் என பயந்து கொண்டிருந்தாள். கிறிஸ்தவர்கள் ரோமர்களால் வெறுக்கப்பட்டனர். அநேக கிறிஸ்தவர்கள் தூக்குத் தண்டனைக்குள்ளாயினர் அல்லது சிங்கங்களின் அரங்கில் தூக்கி வீசப்பட்டனர் என்பது அவளுக்குத் தெரியும். அவள் சோதிக்கப்படும்போது தன்னுடைய உண்மைக்காக நிற்கத் தகுந்த தைரியம் அவளுக்கிருக்குமா?

அவள் மிகவும் பயந்த காரியம் உண்மையில் நடந்த போது, அவளுடைய எஜமானியும், கிறிஸ்தவத்தை வெறுத்த ரோம அதிகாரிகளும் அவளுக்கு எதிராக வருகின்றனர். அவளுக்கு இரண்டே வாய்ப்புகள் உள்ளன. ஒன்று கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டு விடல், மற்றொன்று சிங்கங்களின் அரங்கினுள் தள்ளப்படல். ஆனால் எப்பொழுது அவள் இயேசுவே கிறிஸ்து என அறிக்கை செய்தாளோ அப்பொழுதே அவளுடைய பயம் அவளை விட்டு ஒழிந்தது. அவள் சாவை எதிர்நோக்கிய போதும், தைரியமாக நின்றாள்.

சில வேளைகளில் நாம் சரியானவற்றைச் செய்வதற்காக நாம் துன்புறுத்தப்படலாம் என வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அல்லது உலகத்தாரைப் போல வாழாமல் தேவனைப் போல வாழும் போது நாம் துன்புறுத்தப்படலாம். ஆனால் பயப்படாதிருங்கள் (1 பேது. 3:14), கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் (வச. 15) என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. ஹடாஷாவின் முக்கிய யுத்தம் அவளுடைய இருதயத்தில் ஆரம்பித்தது. இறுதியாக அவள் இயேசுவைத் தேர்ந்து கொள்ள தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டபோது, தன் விசுவாசத்தில் உண்மையாயிருக்க அவளுக்கு தைரியம் கிடைத்து விட்டது.         

நாமும் தேவனை கனப்படுத்த முடிவெடுக்கும் போது அவர் நாம் தைரியமாக நிற்கவும் எதிர்ப்புகளின் மத்தியில் பயத்தை மேற்கொள்ளவும் உதவி செய்கிறார்.

வல்லமைக்குள் ஓடுதல்

நான் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது, வாள் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய பயிற்சியாளர் எனக்கெதிராக வரும் அசைவுகளுக்குகந்த பாதுகாப்பு நிலையை கத்திச் சொல்வார் (பாரி). அவர் தன்னுடைய கருவியை நீட்டி அந்த தாக்குதலை எதிர்க்கும்படி கத்திச் சொல்லும்போது நான் அதனை கவனித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.

இப்படி கவனித்து, உடனடியாகச் செயல்படுகின்ற மனதை, உடனடி கீழ்ப்படிதலை, வேதாகமம் பாலியல் சோதனைகள் வரும்போது பயன்படுத்தச் சொல்லுகிறது 1 கொரி. 6:18ல் பவுல் விசுவாசிகளுக்கு, வேசிகளிடமிருந்து விலகியிருக்கும்படி போதித்து வேசித்தனத்துக்கு விலகியோடுங்கள் என்று குறிப்பிடுகிறார். சில வேளைகளில் நாமும் சவால் நிறைந்த சந்தர்ப்பங்களில் “உறுதியாக நிற்கும்படி” அறிவுறுத்தப்படுகிறோம் (கலா. 5:1, எபே. 6:11). நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாக, வேதாகமம் “விலகி ஓடு” என வலியுறுத்திக் கூறுகிறது.

உடனடி செயல் நம்மை சமரசம் செய்து கொள்வதிலிருந்து காத்துக் கொள்கிறது. சிறிய சமரசங்கள் பேரழிவை உண்டாக்கும் தோல்விகளுக்கு வழி வகுக்கும். ஒரு கட்டுப்படுத்த முடியாத சிந்தனை, வலைதளங்களில் தவறான இடத்திற்குச் செல்லும் பார்வை, திருமணமான பின்பும் நண்பர்களோடு சுற்றுதல் ஆகிய இவைகள் நாம் செல்லக் கூடாத வழிகளுக்கு நம்மை இழுத்துச் சென்று, நம்மை தேவனை விட்டுப் பிரிக்கின்றன.

நாம் சபலங்களுக்கு விலகியோடும் போது நாம் ஓடிச் சேர, தேவன் ஓர் இடத்தைத் தருகிறார். நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் தம்மையே பலியாக்கினதின் மூலம், அவர் நமக்கு நம்பிக்கையையும், மன்னிப்பையும், புதிய துவக்கத்தையும் தருகிறார். நாம் எங்கிருந்தாலும், என்ன செய்திருந்தாலும் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். நம் பெலவீனங்களில், நாம் இயேசுவிடம் செல்லும்போது அவர் நம்மை விடுவித்து அவருடைய பெலத்தினால் வாழ வழி வகுக்கிறார்.

அனைவரையும் நேசித்தல்

சிங்கப்பூர் தீவில் (இருபத்தைந்து மைல் நீளமும், பதினைந்து மைல் அகலமும் கொண்டது) மிகவும் அரிதான விசாலமான வெளியில் அமையப் பெற்ற ஒரு தேவாலயத்தில் நான் ஆராதித்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நாட்டில் வந்து பணி புரியும் வெளி நாட்டினர் ஒவ்வொரு ஞாயிறும் ஆலய வளாகத்தில் வந்து கூடுவதை வழக்கமாக்கியுள்ளனர். எங்களில் சிலர் இந்த பார்வையாளர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் எரிச்சலடைந்து, கூச்சலிட்டனர். வேறு சிலர், அந்த ஆலய வளாகத்தை விட்டுச் செல்லாமல் இருந்து, இது நம்முடைய விருந்தோம்பலை அந்நிய கூட்டத்தினருக்குக் காட்டக் கூடிய ஒரு தெய்வீக வாய்ப்பாகக் கருதினர்.

இஸ்ரவேலரும் இத்தகைய ஒரு பிரச்சனையை அவர்கள் காலத்தில் சந்தித்தனர். அவர்கள் தங்கள் புதிய தேசத்தில் குடியமர்ந்த போது தங்கள் அருகிலிருக்கும் அந்நியரோடு எப்படி பழகுவது என்பதான ஒரு பிரச்சனை எழுந்தது. ஆனால் தேவன் அவர்களிடம் உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனைச் சுதேசி போல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறது போல அவனிலும் அன்புகூருவீர்களாக (லேவி. 19:34) என்று கட்டளையாகச் சொன்னார். தேவன் அவர்களுக்குக் கொடுத்த அநேக சட்டங்களில், அந்நியரைக் குறித்து அவர்களை தவறாக நடத்தவோ அல்லது ஒடுக்கவோ கூடாது என்றும் அவர்களை நேசித்து உதவுவீர்களாக என்றும் சொல்லுகிறார் (யாத். 23:9 ; உபா. 10:19). நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயேசுவும் இதனையே செய்யும்படி கட்டளையாகக் கொடுக்கின்றார். உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல, பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று கட்டளையிட்டார் (மாற். 12:31).

நாம் இப்புவியில் சிலகாலம் தங்கிச் செல்லும் பிரயாணிகள் என்பதை நினைத்து, தேவனின் அன்பு இருதயத்தைப் போல, பிறரையும் நம்மைப் போல நேசிப்போம். தேவன் நம்மை தம்முடைய சொந்த ஜனங்களாக நேசித்து நடத்துகின்றாரே.

அவருடைய வழி நடத்துதலின்படி பின் தொடரல்

நான் குழந்தையாயிருந்த போது, ஞாயிறு மாலை ஆலய ஆராதனையை எதிர்பார்த்திருப்பேன். அது அத்துணை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஞாயிறு இரவுகளில் அடிக்கடி, மிஷனரிகள் அல்லது கௌரவ பேச்சாளர்கள் செய்தி தருவது வழக்கம். அவர்களுடைய செய்திகள் என்னை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம், அவர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள், தங்கள் வீடு, உடைமைகளை, எதிர்காலம் எல்லாவற்றையும் விட்டு விட மனமுவந்ததோடு, ஒன்றும் தெரியாத, புதுமையான, சில வேளைகளில் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று தேவனுக்கு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்ததேயாகும்.

அந்த மிஷனரிகளைப் போன்று, எலிசா அநேக காரியங்களை விட்டு விட்டு தேவனைப் பின் தொடர்ந்தார்.
(1 இரா. 19:19-21). எலியாவின் மூலம் தேவன் அவரைப் பணி செய்ய அழைக்கும் முன்னர், நமக்கு எலிசாவைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் ஒரு விவசாயி என்பது மட்டும் தான் தெரியும். எலியா, எலிசா தன்னுடைய வயல்களில் உழுது கொண்டிருக்கும் போது சந்தித்து, தன்னுடைய சால்வையை அவருடைய தோள் மீது போட்டு (அது தீர்க்கதரிசியாவதற்கு ஓர் அடையாளம்) தன்னைப் பின் தொடருமாறு அழைக்கின்றார். அவரும் தன் தாயையும், தந்தையையும் முத்தமிட்டு திரும்பி வர தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டதுடன், எலிசா தன்னுடைய ஏர் மாடுகளை அர்ப்பணித்து, அவற்றை அடித்து, ஏர் மரங்களால் அவற்றைச் சமைத்து, தன் பெற்றோரிடம் சொல்லி விட்டு எலியாவைப் பின் தொடர்ந்தான்.

நம்மில் அநேகர் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு விட்டு தேவனுக்குப் பணி செய்யும்படி முழு நேர மிஷனரிகளாக அழைக்கப்படாவிட்டாலும், தேவன் நம் அனைவரையும் அவரைப் பின்பற்றும்படி விரும்புகின்றார். தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ அப்படியே அவனவன் நடக்கக்கடவன் (1 கொரி. 7:17).

என்னுடைய அனுபவத்திலிருந்து, நாம் நம்முடைய வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும், நாம் எங்கிருந்தாலும் தேவனுக்குப் பணி செய்வதென்பது பரபரப்பாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும்.